கிறுக்கல்-51 | 26-01-2019



உதிர்க்கும் வார்த்தைகள்
ஒவ்வொன்றிலும்,உண்மை வேண்டும்.
செய்யும் செயல்கள் அனைத்திலும்,
நேர்மை வேண்டும்.
உலகத்தை பார்க்கும் பார்வையில்,
தெளிவு வேண்டும்.
இதயத்தின் ஓரத்தில் எப்பொழுதும் ,
ஈரம்‌ வேண்டும்.
முயற்சியை கைவிடாமல் எந்நாளும்,
வாழ்ந்திடல் வேண்டும்.
உழைத்தே எப்பொழுதும்,
உயர்தல் வேண்டும்.


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

  1. ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
    செல்லும்வாய் எல்லாஞ் செயல்

    ReplyDelete