வலிகள் யாவும் வரிகளாக,
மாறிட கண்டேன் 😔
விழிகள் யாவும் கண்ணீரில்,
மூழ்கிட கண்டேன் 😔
காதல் யாவும் காற்றில்,
கரைந்திட கண்டேன் 😔
புன்னகை யாவும் புதையலாய்,
தோன்றிட கண்டேன் 😔
சிந்தனை‌கள் யாவும் ஒன்றாக,
சிதறிட கண்டேன் 😔
ஏமாற்றங்கள் யாவும் மனதை கல்லாய்,
மாற்றிட கண்டேன் 😔
மனிதர்கள் யாவரும் நிமிடங்களில்,
மாறிட கண்டேன் 😔
எத்தனை மாற்றங்கள் என்னுள் !!!
வாழ்க்கை இதுதானோ ?
வாழ்க்கை இதுதானோ ?😔😣

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

தட்டி பறிக்கும் தந்திர‌
உலகிது !
வித்தைகள் அரங்கேற்றும் நாடக
உலகிது!
ஆளுமை செலுத்தும் அதிகார
உலகிது !
புறம் பேசும் பொல்லாத
உலகிது !
பொய்மையை போற்றும் பொய்யான
உலகிது !
நேர்மையை நசுக்கும் நாசகார
உலகிது !
இவையில்லா உலகத்தை இனி
படைத்தாலும் ?
மனிதன் மாறுவானோ ??
மனிதன் மாறுவானோ ??? 

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

எதிர்பார்க்கும் உலகத்தில்,
எதார்த்தமாக நாம் வாழ்ந்தால்,
ஏமாற்றமே !

புறம்பேசும் உலகத்தில்,
செவிடாக நாம் வாழ்ந்தால்,
நிம்மதியே !

தரமற்ற உறவுகளிடம்,
விலகியே நாம் வாழ்ந்தால்,
தன்மானமே !

பொறாமை நிறைந்த உலகத்தில்,
பொதுப்படையாக நாம் வாழ்ந்தால்,
மனிதமே !

தோல்விகள் நிறைந்த உலகத்தில்,
போராடி நாம் வாழ்ந்தால்,
வெற்றியே !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment