கிறுக்கல்-102 | 03-07-2019

எதிர்பார்க்கும் உலகத்தில்,
எதார்த்தமாக நாம் வாழ்ந்தால்,
ஏமாற்றமே !

புறம்பேசும் உலகத்தில்,
செவிடாக நாம் வாழ்ந்தால்,
நிம்மதியே !

தரமற்ற உறவுகளிடம்,
விலகியே நாம் வாழ்ந்தால்,
தன்மானமே !

பொறாமை நிறைந்த உலகத்தில்,
பொதுப்படையாக நாம் வாழ்ந்தால்,
மனிதமே !

தோல்விகள் நிறைந்த உலகத்தில்,
போராடி நாம் வாழ்ந்தால்,
வெற்றியே !


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :