என் விழியின் சோகங்களை
அறிந்தோரில்லை !
என் மௌனத்தின் அர்த்தங்களை
புரிந்தோரில்லை !
என் அன்பின் ஆழத்தை
அளந்தோரில்லை !
என் தனிமையின் வலிகளை
கடந்தோரில்லை !
என் கண்ணீரின் காரணங்களை
தெரிந்தோரில்லை !
என் இதயத்தின் வலிகளை
உணர்ந்தோரில்லை !



Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment


சூழ்ச்சிக்கள் செய்து ஒருவனை வீழ்த்துவதைவிட,
தோற்பதே மேல் !
பகையை மனதில் சுமந்து
வாழ்வதைவிட, மறப்பதே‌ மேல் !

ஆமாம் போடும் கோழையாக
வாழ்வதைவிட, எதிர்ப்பதே மேல் !
பிறர் உழைப்பை திருடி
வாழ்வதைவிட, சாதலே மேல் !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

வலி எனக்கு புதிதல்ல ?
வலி தருபவர்கள் தான் புதிது !

தனிமை எனக்கு புதிதல்ல !
தனிமை தரும் அனுபவமே புதிது !

கண்ணீர் எனக்கு புதிதல்ல !
கண்ணீரின் காரணங்கள் தான் புதிது !

மனிதர்கள் எனக்கு புதிதல்ல !
அவர்களின் மாற்றங்கள் தான் புதிது !

வாழ்க்கையில் கஷ்டங்கள் புதிதல்ல !
அவை கற்றுத்தரும் பாடங்கள் புதிது !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment


நன்றி மறந்தவனையும் !
நன்றியோடு இருப்பவனையும் !!
ஒருநாளும் மறவாதே !!!


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment


நம்மை மதிப்பவர்களிடம்,
"அன்புக்கொள்"
நம்மை மதிக்காதவர்களிடம்,
"விலகிக்கொள்"
அன்புடன் பழகும் மனிதர்களிடம், உறவுக்கொள் !
தோல்வியில் தோள் கொடுப்பவர்களிடம்,
"நன்றிக்கொள்"
நன்றி மறவா மனிதர்களிடம்,
"நட்புக்கொள்"
நேர்மை தவிரா மனிதர்களிடம்,
"மரியாதைக்கொள்"
பிறர் வலி உணரும் மனிதர்களிடம்,
"பகிர்ந்துக்கொள்"
மனிதர்கள் அனைவரும் சமம்யென்பதை,
"மனதில்கொள்"



Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 5 comments |

5 comments :

Post a Comment


என் விழிகளின் ஏக்கங்கள் ?
தேவதையின் அம்சமென தோன்றும்
"உன் உருவம்"
என் செவிகளின் ஏக்கங்கள் ?
இசைப்போல் இனிக்கும்
"உன் குரல்"
என் கரங்களின் ஏக்கங்கள் ?
மணவறையில் கோர்த்திட தோன்றும்
"உன் மெல்லியகரங்கள்"
என் விரல்களின் ஏக்கங்கள் ?
மடிசாய்த்து தீண்டிட தோன்றும்
"உன் கருங்கூந்தல்"
என் இதயத்தின் ஏக்கங்கள் ?
மரண படுக்கையிலும் மறவாத
"உன் காதல்"



Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment



துணிவோடு நடப்பவனுக்கு,
பாதையை எண்ணிய பயமில்லை !
நட்புக்களோடு ‌வாழ்பவனுக்கு,
தனிமையை எண்ணிய கவலையில்லை !
கொடுத்தே பழகியவனுக்கு,
இழப்பை எண்ணிய வருத்தமில்லை !
உழைப்பை நம்புபவனுக்கு,
தோல்வியை எண்ணிய பயமில்லை !
முயற்சியோடு முயல்பவனுக்கு,
முடிவயை எண்ணிய கவலையில்லை !
வாழ்க்கையை உணர்ந்தவனுக்கு,
எதை எண்ணியும் கவலையில்லை !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment

தடைகளுக்கு அஞ்சாமல் !
      தன்நலம் பாராமல் !
தலைகணம் இல்லாமல் !!
      தற்பெருமை கொள்ளாமல் !
தன்மானம் குன்றாமல் !
      தர்மம் தோற்காமல் !!
தவறுகள் புரியாமல் !
      தரம் தாழாமல் !!
வாழ்பவனே உயர்ந்த மனிதன் :)
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 3 comments |

3 comments :

Post a Comment


முடிந்தால் நால்வரை
என்‌ தோள்களில்‌ சுமப்பேனேயின்றி ,
"ஒருநாளும்" பிறர் தோள்களுக்கு
சுமையாகேன் !!!


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment


கடினமாக நீ உழைத்தால்,
கண்ணியத்தோடு வாழலாம் !
துணிவுடன் நீ நடந்தால்,
துயரங்கள் போக்கலாம் !!

பணிவுடன் நீ வாழ்ந்தால்,
பண்பாலன் ஆகலாம் !
கோவங்கள் நீ தவிர்த்தால்,
குணாலன் ஆகலாம் !!

விடாமல் நீ முயன்றால்,
வெற்றியாலன் ஆகலாம் !
உண்மையாக நீ உழைத்தால்,
தலைவன் ஆகலாம் !!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 7 comments |

7 comments :

Post a Comment