நித்தம் சத்தியம் பேசிடும்,
மனிதர்கள் ! எங்கே ?
நட்பே உயிரென போற்றும்,
மனிதர்கள் ! எங்கே ?
உழைப்பே உயர்வென எண்ணும்,
மனிதர்கள் ! எங்கே ?
உதவும் உயரிய ‌குணம் கொண்ட,
மனிதர்கள் ! எங்கே ?
அன்பே வாழ்வென வாழும்,
மனிதர்கள் ! எங்கே ?
வாழ்வின் அடிப்படை உணர்ந்த,
மனிதர்கள் ! எங்கே ?
எங்கே ! நான் தேடும்
மனிதர்கள் ! எங்கே ???


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

தன் உயிர் கொடுத்து உன்னை ஈன்ற
தாய்க்கு, இளைப்பார ஓரிடம்தான்
இல்லையோ ?😠

தன் இரத்தத்தை உணவாக
ஊட்டியவளுக்கு, ஒருபிடி உணவு ஊட்ட
முடியாதோ ?😠

தன் தூக்கம் தொலைத்து உன்னை வளர்தவளுக்கு, உன் தூக்கம் தொலைத்தால் என்னவோ ?😠

இன்முகம் மாறாமல் சேவை
புரிந்தவளுக்கு, நீ சுழிக்கும் முகமென்ன
அறமோ ???😠

முதுமையை பாரமாய் பாவிக்கும்
மூடர்களே,நீங்கயென்ன முதுமைக்கு ஓர் விதி விலக்கோ??? 😠

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 3 comments |

3 comments :

Post a Comment

தனியறையில் தனித்தே,
தன் முதுமை போக்கும் தாயே 🙄
சற்றே இடறி நீ சுயம் தப்பினாய்,
உன்னை தாங்கிடவா‌ ஓர் உயிரில்லை😢
உயிர் கொடுத்து நீ ஈன்ற மகனோ ?
உன்னை முதியோர் இல்லத்தில்
பணம்கொடுத்து பாதியில் விலகினான்!
உயிரெனவே நீ நினைதவையாவும்,
நிற்கதியாய் உன்னை விட்டது ஏனோ 🙁
பனமெனும் காகிதத்தின் பின்னோடி,
பாசத்தை குப்பையில் வீசியது ஏனோ😠
நீ சிந்தும் கண்ணீர்‌த்துளிகள்,
என் நெஞ்சத்தை பிளப்பது ஏனோ ?😭
உன் மகனாய் நான் மாறி ,
உன் குறைத்தீர்க விடுவாயோ !தாயே🙂

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 3 comments |

3 comments :

Post a Comment

தேடி!தேடி! நீ சேர்த்த செல்வமும் !!
ஓடி!ஓடி! நீ உழைத்த உழைப்பும் !!
பார்த்து!பார்த்து! நீ கொடுத்த தானமும் !!
போராடி!நீ வென்ற வெற்றியும் !!
சிந்தித்து!நீ செய்த செயல்களும் !!
ஊட்டி!ஊட்டி! நீ வளர்த்த பிள்ளையும் !!
அன்பே சிவமென நீ வாழ்ந்த வாழ்க்கையும்,
ஒருநாளும் உன்னை விட்டு விலகாது !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 5 comments |

5 comments :

Post a Comment

உரிமைக்கு குரல்கொடு,
உழைப்பிற்கு தோள்கொடு,
அன்பிற்கு உயிர்கொடு,
அதர்மத்தை எதிர்திடு,
உண்மையை காத்திடு,
துணிவை வளர்த்தெடு,
இழந்ததை மீட்டெடு,
இயன்றதை அளித்திடு,
இயற்கையை போற்றிடு 👆

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

தன்னம்பிக்கையே !
என் தார்மீக மந்திரம் 👆
நேர்மையே !
நான் விரும்பும் அடையாளம் 👆
தன்மானமே !
என் தலைமுறையின் வழிபாடு 👆
உண்மையே !
நான்‌ செல்லும் பாதை 👆
உழைப்பே !
என் வாழ்வின் மூலதனம் 👆
புன்னகையே !
நான் கொண்ட சொத்து 👆
அன்பே !
என் வாழ்வின் அடித்தளம் 👆
மனிதமே !
நான் கொண்ட கொள்கை 👆

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 5 comments |

5 comments :

Post a Comment

உழைத்துக்கொண்டே இரு,
ஒருநாள் ! நம் உழைப்பு அங்கீகாரம்
பெற்றே தீரும் !!
நம்பிக்கை விதைத்துக்கொண்டே இரு,
ஒருநாள் ! நாம் விதைத்தவையாவும் விளைந்தே தீரும் !!
முயன்றுக்கொண்டே இரு,
ஒருநாள் ! முயற்சி நம்மை முன்
நகர்த்தியே தீரும் !!
அறிவை பகிர்ந்துக்கொண்டே இரு,
ஒருநாள் ! பகிர்ந்தவை பண்மடங்கு பெறுகியே தீரும் !!
மனிதத்தை போற்றிக்கொண்டே இரு,
ஒருநாள் ! மனிதர்கள் அனைவரும்
மாறியே தீருவார்கள் !!!


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 4 comments |

4 comments :

Post a Comment

போலி முகங்களும் !
பொய் பேச்சுகளும் !
ஏமாற்றும் கண்களும் !
புறம்பேசும் வாய்களும் !
அழிக்க துடிக்கும் அறிவும் !
இரக்கமற்ற இதயமும் !
படைத்த சில மனிதர்களுடன்,
என் வாழ்வின் ஒரு நொடி பொழுதும்,
நான் செலவிடேன் !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

தோல்வியில் தளராதே !
வெற்றியில் திளைக்காதே !
நம்பிக்கையை இழக்காதே !
உழைப்பதை நிறுத்தாதே !
முயற்சியை கைவிடாதே !
அன்பை மறவாதே !
வாழ்க்கையை ஒருநாளும் வெறுக்காதே 👆

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

பிறர் உழைப்பை திருடாதே !
பிறர் பணத்தில் வாழாதே !
பிறர் உயர்வை தடுக்காதே !
பிறர் துன்பத்தை இரசிக்காதே !
பிறர் இன்பத்தை கெடுக்காதே !  
பிறரை ஏமாற்றி என்றுமே பிழைக்காதே!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment

நிலையற்ற இவ்வுலகில்,
நிரந்திரம் என எதுவுமில்லை !
சுமையென்று நாம் நினைத்தால்,
சுமந்திடவோ ஓர் மனமில்லை !
தடையென்று நாம் நினைத்தால்,
தாண்டிடவோ ஓர் வழியில்லை !
பாதைகள் இருண்டாலும்,
பார்வைகள் இருளாக போவதில்லை !
முயற்சியொடு நாம் முயன்றால்,
முடியாதது என எதுவுமில்லை !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

நம் எழுச்சி ! பிறரின் எழுச்சிக்கு,
தூண்டுதலாய் அமைந்திடல் வேண்டும் 👆
நம் வெற்றி ! பிறரின் வெற்றிக்கு,
அடிப்படையாய் அமைந்திடல் வேண்டும் 👆
நம் பயணம் ! பிறரின் பயணத்திற்கு,
வழித்தடமாய் அமைந்திடல் வேண்டும் 👆
நம் சிந்தனை‌ ! பிறரின் சிந்தனைக்கு,
புகலிடமாய்  அமைந்திடல் வேண்டும்    👆
நம் எழுத்து !பிறரின் தன்னம்பிக்கைக்கு,
அடித்தலமாய்  அமைந்திடல் வேண்டும் 👆
நம் வாழ்க்கை ! பிறரின் வாழ்க்கைக்கு,
எடுத்துக்காட்டாய் அமைந்திடல் வேண்டும்
👆

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment