நிலவொளி நீயென்றால்,
கருவிழியாய் நான்மாறி,
என்னுள் உன்னை சிறைப்பிடிப்பேன் !
பனித்துளி நீயென்றால்,
சூரியனாய் நான்மாறி,
உன்னை நான் அடைவேன் !
மழைநீர் நீயென்றால்,
கடலாக நான்மாறி,
என்னுள் உன்னை சேர்ப்பேன் !
காற்றாய் நீயானால்,
கலைஞனாய் நான்மாறி,
உன்னை நான் இசைப்பேன் !
இரவாக நீயானால்,
கனவாக நான்மாறி,
என்னுள் நான் நிறைவேன் !
தமிழாய் நீயானால்,
கவியாய் நான்மாறி,
காவிய கவி படைப்பேன்
Leave a Comment Read More
எழுதப்பட்டவையே யாவும் !எதையிழந்தாலும் கவலையின்றி,
நடப்பவை நடக்கட்டும் என்பதே வாழ்க்கை !!
நடப்பவை நடக்கட்டும் என்பதே வாழ்க்கை !!
Leave a Comment Read More
அறிவென்னும் அகந்தை கொள்ளும்,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
கர்வமென்னும் காரிருள் சூழ்ந்த,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
" மறவாதீர்"
செல்வத்தில் செருக்கேறிய ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
புறம்பேசும் புலமைப்படைத்த ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
பொய்மையில் பொருளிட்டும் ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
மண்ணோடு மண்ணாகி ,
புழுவிற்கு உறமாகும் மனிதர்களே !!
"மறவாதீர் மானிடும் போற்ற "
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
கர்வமென்னும் காரிருள் சூழ்ந்த,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
" மறவாதீர்"
செல்வத்தில் செருக்கேறிய ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
புறம்பேசும் புலமைப்படைத்த ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
பொய்மையில் பொருளிட்டும் ,
மனிதர்களே ! ஓ மனிதர்களே !!
"மறவாதீர்"
மண்ணோடு மண்ணாகி ,
புழுவிற்கு உறமாகும் மனிதர்களே !!
"மறவாதீர் மானிடும் போற்ற "
Leave a Comment Read More