கிறுக்கல்-118 | 24-03-2024
நிலவொளி நீயென்றால்,
கருவிழியாய் நான்மாறி,
என்னுள் உன்னை சிறைப்பிடிப்பேன் !
பனித்துளி நீயென்றால்,
சூரியனாய் நான்மாறி,
உன்னை நான் அடைவேன் !
மழைநீர் நீயென்றால்,
கடலாக நான்மாறி,
என்னுள் உன்னை சேர்ப்பேன் !
காற்றாய் நீயானால்,
கலைஞனாய் நான்மாறி,
உன்னை நான் இசைப்பேன் !
இரவாக நீயானால்,
கனவாக நான்மாறி,
என்னுள் நான் நிறைவேன் !
தமிழாய் நீயானால்,
கவியாய் நான்மாறி,
காவிய கவி படைப்பேன்
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!
Mohanlakshmanan | Leave a Comment |
No comments :
Post a Comment