நிலவொளி நீயென்றால்,

கருவிழியாய் நான்மாறி,

என்னுள் உன்னை சிறைப்பிடிப்பேன் !


பனித்துளி நீயென்றால்,

சூரியனாய் நான்மாறி,

உன்னை நான் அடைவேன் !


மழைநீர்  நீயென்றால்,

கடலாக நான்மாறி,

என்னுள் உன்னை சேர்ப்பேன் !


காற்றாய் நீயானால்,

கலைஞனாய் நான்மாறி,

உன்னை நான் இசைப்பேன் !


இரவாக நீயானால்,

கனவாக நான்மாறி,

என்னுள் நான் நிறைவேன் !


தமிழாய் நீயானால்,

கவியாய் நான்மாறி,

காவிய கவி படைப்பேன்


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment