நேர்மையென்னும் ஆயுதத்தில்,
அன்பென்னும் அம்பினை பூட்டி !
இலக்கை நோக்கி நகர்ந்தால்,
வெற்றியென்னும் இரையை ருசிக்கலாம் !!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 4 comments |

4 comments :

Post a Comment

தேவைகள் தீர்ந்த பின்,
தேடிய யாவும் ? தேவையற்றவையே !!!
தேடி தேடி சேர்க்காமல் ?!
தேவைகளோடு வாழ்பவர்களின்,
தேவைகளை தீர்ப்போம் !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

முட்டி மோதி ! உலகை எட்டி பார்க்கும்,
பறவை குஞ்சு ஒன்றை கண்டேன் !!
நித்தம் போராடி ! அதன் சிறகை விரித்து, வானில் பறக்க கண்டேன் !!
உணவை தேடி !
ஓயாமல் உழைப்பதை கண்டேன் !!
உழைத்து களைத்தும் !
உணவை பகிர்ந்து உண்ண கண்டேன் !!
தான்னென்று நில்லாமல் !
தன்னலம் கருதாமல் , வாழ கண்டேன்!!
எத்தனை பொறாமை என்னுள் !!!
எத்தனை பொறாமை என்னுள் !!! பறவையே😊


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

பணம் மறந்த பாதசாரியாய்,
சில நாள் !!
சுற்றி திரியும் பறவையாய்,
சில நாள் !!
பச்சிளம் குழந்தையின் புன்னகையாய்,
சில நாள் !!
மண்ணுக்கு உரம் சேர்க்கும் புழுவாக,
சில நாள் !!
இளைப்பாற நிழல் தரும் மரமாக,
சில நாள் !!!
கள்ளம் கபடமற்ற மனிதனாய்,
சில நாள் !!
வாழ்ந்திடவோ ஆசை !?
வாழ்ந்திடவோ ஆசை !?

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

வலிகள் யாவும் வரிகளாக,
மாறிட கண்டேன் 😔
விழிகள் யாவும் கண்ணீரில்,
மூழ்கிட கண்டேன் 😔
காதல் யாவும் காற்றில்,
கரைந்திட கண்டேன் 😔
புன்னகை யாவும் புதையலாய்,
தோன்றிட கண்டேன் 😔
சிந்தனை‌கள் யாவும் ஒன்றாக,
சிதறிட கண்டேன் 😔
ஏமாற்றங்கள் யாவும் மனதை கல்லாய்,
மாற்றிட கண்டேன் 😔
மனிதர்கள் யாவரும் நிமிடங்களில்,
மாறிட கண்டேன் 😔
எத்தனை மாற்றங்கள் என்னுள் !!!
வாழ்க்கை இதுதானோ ?
வாழ்க்கை இதுதானோ ?😔😣

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

தட்டி பறிக்கும் தந்திர‌
உலகிது !
வித்தைகள் அரங்கேற்றும் நாடக
உலகிது!
ஆளுமை செலுத்தும் அதிகார
உலகிது !
புறம் பேசும் பொல்லாத
உலகிது !
பொய்மையை போற்றும் பொய்யான
உலகிது !
நேர்மையை நசுக்கும் நாசகார
உலகிது !
இவையில்லா உலகத்தை இனி
படைத்தாலும் ?
மனிதன் மாறுவானோ ??
மனிதன் மாறுவானோ ??? 

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

எதிர்பார்க்கும் உலகத்தில்,
எதார்த்தமாக நாம் வாழ்ந்தால்,
ஏமாற்றமே !

புறம்பேசும் உலகத்தில்,
செவிடாக நாம் வாழ்ந்தால்,
நிம்மதியே !

தரமற்ற உறவுகளிடம்,
விலகியே நாம் வாழ்ந்தால்,
தன்மானமே !

பொறாமை நிறைந்த உலகத்தில்,
பொதுப்படையாக நாம் வாழ்ந்தால்,
மனிதமே !

தோல்விகள் நிறைந்த உலகத்தில்,
போராடி நாம் வாழ்ந்தால்,
வெற்றியே !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment

நான் கொண்ட தேவைகளோ சிறிது ! தேடல்களோ பெரிது !!
நான் கொண்ட அறிவோ சிறிது !
அன்போ பெரிது !!
நான் கொண்ட செல்வங்களோ சிறிது !
மனதோ பெரிது !!
நான் கொண்ட நண்பர்களோ சிறிது !
எதிரிகளோ பெரிது !!
நான் கொண்ட வெற்றிகளோ சிறிது ! தோல்விகளோ பெரிது !!
நான் கொண்ட தத்துவங்களோ மிக சிறிது !
அதன் ஆழங்களோ மிக பெரிது !!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment


வாழ்வில்! இலக்கென்று எதுமில்லை ?
எட்டி பிடிப்பதற்கு !!!
வாழ்வில் ! இழப்பதற்கு எதுமில்லை ?
பயந்து பணிவதற்கு !!!
வாழ்வில் ! சோகங்கள் எதுமில்லை ?
சோர்ந்து போவதற்கு !!!
வாழ்வில் ! சுமையென்று எதுமில்லை ?
சுமந்து செல்வதற்கு !!!
வாழ்வில் !எனக்கென்று யாருமில்லை?
விட்டு விலகுவதற்கு !!!
வாழ்க்கையின்மேல் பெரியதொரு பற்றில்லை ?
வாழ்ந்து பார்ப்பதற்கு !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 5 comments |

5 comments :

Post a Comment

சற்றே தொலைவில்,
விண்மீன்களின் கூட்டத்தில்,
பிரகாசிக்கும் நிலவைப்போன்றொரு,
பெண்ணை கண்டேன்,
கண்டதும் காதலுற்றேன் !
அவளின் ஆற்பரிக்கும் அழகிற்கு அடிமையானேன் !
அவள் சிரிப்பில் சிக்கி நான்
சிதறி போனேன் !
நித்தம் அவள் சிந்தனையில்
மூழ்கிப் போனேன் !
பார்ப்பவர்கள் யாவரும் அவள்போல்
தோன்றிடும் மாயம் கண்டேன் !
எண்ணுள் புதுவித மாற்றம் கொண்டேன் !
இதுதான் காதலோ?இதுதான் காதலோ?

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

நித்தம் சத்தியம் பேசிடும்,
மனிதர்கள் ! எங்கே ?
நட்பே உயிரென போற்றும்,
மனிதர்கள் ! எங்கே ?
உழைப்பே உயர்வென எண்ணும்,
மனிதர்கள் ! எங்கே ?
உதவும் உயரிய ‌குணம் கொண்ட,
மனிதர்கள் ! எங்கே ?
அன்பே வாழ்வென வாழும்,
மனிதர்கள் ! எங்கே ?
வாழ்வின் அடிப்படை உணர்ந்த,
மனிதர்கள் ! எங்கே ?
எங்கே ! நான் தேடும்
மனிதர்கள் ! எங்கே ???


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

தன் உயிர் கொடுத்து உன்னை ஈன்ற
தாய்க்கு, இளைப்பார ஓரிடம்தான்
இல்லையோ ?😠

தன் இரத்தத்தை உணவாக
ஊட்டியவளுக்கு, ஒருபிடி உணவு ஊட்ட
முடியாதோ ?😠

தன் தூக்கம் தொலைத்து உன்னை வளர்தவளுக்கு, உன் தூக்கம் தொலைத்தால் என்னவோ ?😠

இன்முகம் மாறாமல் சேவை
புரிந்தவளுக்கு, நீ சுழிக்கும் முகமென்ன
அறமோ ???😠

முதுமையை பாரமாய் பாவிக்கும்
மூடர்களே,நீங்கயென்ன முதுமைக்கு ஓர் விதி விலக்கோ??? 😠

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 3 comments |

3 comments :

Post a Comment

தனியறையில் தனித்தே,
தன் முதுமை போக்கும் தாயே 🙄
சற்றே இடறி நீ சுயம் தப்பினாய்,
உன்னை தாங்கிடவா‌ ஓர் உயிரில்லை😢
உயிர் கொடுத்து நீ ஈன்ற மகனோ ?
உன்னை முதியோர் இல்லத்தில்
பணம்கொடுத்து பாதியில் விலகினான்!
உயிரெனவே நீ நினைதவையாவும்,
நிற்கதியாய் உன்னை விட்டது ஏனோ 🙁
பனமெனும் காகிதத்தின் பின்னோடி,
பாசத்தை குப்பையில் வீசியது ஏனோ😠
நீ சிந்தும் கண்ணீர்‌த்துளிகள்,
என் நெஞ்சத்தை பிளப்பது ஏனோ ?😭
உன் மகனாய் நான் மாறி ,
உன் குறைத்தீர்க விடுவாயோ !தாயே🙂

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 3 comments |

3 comments :

Post a Comment

தேடி!தேடி! நீ சேர்த்த செல்வமும் !!
ஓடி!ஓடி! நீ உழைத்த உழைப்பும் !!
பார்த்து!பார்த்து! நீ கொடுத்த தானமும் !!
போராடி!நீ வென்ற வெற்றியும் !!
சிந்தித்து!நீ செய்த செயல்களும் !!
ஊட்டி!ஊட்டி! நீ வளர்த்த பிள்ளையும் !!
அன்பே சிவமென நீ வாழ்ந்த வாழ்க்கையும்,
ஒருநாளும் உன்னை விட்டு விலகாது !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 5 comments |

5 comments :

Post a Comment

உரிமைக்கு குரல்கொடு,
உழைப்பிற்கு தோள்கொடு,
அன்பிற்கு உயிர்கொடு,
அதர்மத்தை எதிர்திடு,
உண்மையை காத்திடு,
துணிவை வளர்த்தெடு,
இழந்ததை மீட்டெடு,
இயன்றதை அளித்திடு,
இயற்கையை போற்றிடு 👆

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

தன்னம்பிக்கையே !
என் தார்மீக மந்திரம் 👆
நேர்மையே !
நான் விரும்பும் அடையாளம் 👆
தன்மானமே !
என் தலைமுறையின் வழிபாடு 👆
உண்மையே !
நான்‌ செல்லும் பாதை 👆
உழைப்பே !
என் வாழ்வின் மூலதனம் 👆
புன்னகையே !
நான் கொண்ட சொத்து 👆
அன்பே !
என் வாழ்வின் அடித்தளம் 👆
மனிதமே !
நான் கொண்ட கொள்கை 👆

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 5 comments |

5 comments :

Post a Comment

உழைத்துக்கொண்டே இரு,
ஒருநாள் ! நம் உழைப்பு அங்கீகாரம்
பெற்றே தீரும் !!
நம்பிக்கை விதைத்துக்கொண்டே இரு,
ஒருநாள் ! நாம் விதைத்தவையாவும் விளைந்தே தீரும் !!
முயன்றுக்கொண்டே இரு,
ஒருநாள் ! முயற்சி நம்மை முன்
நகர்த்தியே தீரும் !!
அறிவை பகிர்ந்துக்கொண்டே இரு,
ஒருநாள் ! பகிர்ந்தவை பண்மடங்கு பெறுகியே தீரும் !!
மனிதத்தை போற்றிக்கொண்டே இரு,
ஒருநாள் ! மனிதர்கள் அனைவரும்
மாறியே தீருவார்கள் !!!


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 4 comments |

4 comments :

Post a Comment

போலி முகங்களும் !
பொய் பேச்சுகளும் !
ஏமாற்றும் கண்களும் !
புறம்பேசும் வாய்களும் !
அழிக்க துடிக்கும் அறிவும் !
இரக்கமற்ற இதயமும் !
படைத்த சில மனிதர்களுடன்,
என் வாழ்வின் ஒரு நொடி பொழுதும்,
நான் செலவிடேன் !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

தோல்வியில் தளராதே !
வெற்றியில் திளைக்காதே !
நம்பிக்கையை இழக்காதே !
உழைப்பதை நிறுத்தாதே !
முயற்சியை கைவிடாதே !
அன்பை மறவாதே !
வாழ்க்கையை ஒருநாளும் வெறுக்காதே 👆

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

பிறர் உழைப்பை திருடாதே !
பிறர் பணத்தில் வாழாதே !
பிறர் உயர்வை தடுக்காதே !
பிறர் துன்பத்தை இரசிக்காதே !
பிறர் இன்பத்தை கெடுக்காதே !  
பிறரை ஏமாற்றி என்றுமே பிழைக்காதே!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment

நிலையற்ற இவ்வுலகில்,
நிரந்திரம் என எதுவுமில்லை !
சுமையென்று நாம் நினைத்தால்,
சுமந்திடவோ ஓர் மனமில்லை !
தடையென்று நாம் நினைத்தால்,
தாண்டிடவோ ஓர் வழியில்லை !
பாதைகள் இருண்டாலும்,
பார்வைகள் இருளாக போவதில்லை !
முயற்சியொடு நாம் முயன்றால்,
முடியாதது என எதுவுமில்லை !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

நம் எழுச்சி ! பிறரின் எழுச்சிக்கு,
தூண்டுதலாய் அமைந்திடல் வேண்டும் 👆
நம் வெற்றி ! பிறரின் வெற்றிக்கு,
அடிப்படையாய் அமைந்திடல் வேண்டும் 👆
நம் பயணம் ! பிறரின் பயணத்திற்கு,
வழித்தடமாய் அமைந்திடல் வேண்டும் 👆
நம் சிந்தனை‌ ! பிறரின் சிந்தனைக்கு,
புகலிடமாய்  அமைந்திடல் வேண்டும்    👆
நம் எழுத்து !பிறரின் தன்னம்பிக்கைக்கு,
அடித்தலமாய்  அமைந்திடல் வேண்டும் 👆
நம் வாழ்க்கை ! பிறரின் வாழ்க்கைக்கு,
எடுத்துக்காட்டாய் அமைந்திடல் வேண்டும்
👆

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

எங்கே செல்கிறது எம் நாடு ?😟

உழைப்பவனுக்கு உயர்வுயில்லை !
உழுபவனுக்கு உரிமையில்லை !
படித்தவனுக்கு வேலையில்லை !
பெண்களுக்கு பாதுகாப்பில்லை !
நிலத்தடியில் நீர்யில்லை !
சுத்தமான காற்றில்லை !
சுகாதாரமான வாழ்வில்லை !
போராட்டமே நம் வாழ்வில்லை !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment

முயற்சியை முதலாக்கி !
உழைப்பை உரமாக்கி !
நம்பிக்கையை விதையாக்கி!
அறிவை நீராக்கி !
வஞ்சங்களை களைநீக்கி !
அன்பை ! அறுவடை செய்வதே,
வாழ்க்கை 👆

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 3 comments |

3 comments :

Post a Comment

தவறுகளை தட்டிக்கேட்டு,
"பழகிக்கொள்"
தேவையற்ற விமர்சனங்களை,
"தவிர்த்துக்கொள்"
சுயநல போக்கை சற்றே
"விலகிக்கொள்"
தன்மானம் தளராமல்,
"பார்த்துக்கொள்"
தன்னம்பிக்கையை நாள்தோறும், வளர்த்துக்கொள் !
ஞாபகங்களை சிதறாமல்,
"சேர்த்துக்கொள்"
வாழ்க்கையை பிறருக்கு பயனுள்ளதாக
"மாற்றிக்கொள்"

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

நேர்மையும்,உண்மையும்
உடமையாய் கொண்டவன் ,
கடவுளையோ அல்ல காவியையோ ?
பிறர் கால்களையோ தழுவும் அவசியமில்லை !!!

தோல்வியே வரினும்,
நெஞ்சை நிமிர்த்து நில் !
நேர்மை நம்மை ஒருநாளும்
கைவிடாது !!

இயற்கையே கடவுள் !
உண்மையே தெய்வம் !!
நேர்மையே நம் வழிபாடு !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment

இதய துடிப்பை இருக்கி பிடித்தவளே !
இமைகள் அசையா அதிசயமே !
உன் நிழல் பார்த்தே நான்
காதலுற்றேன் !

உயிர் ஊட்டிய ஒவியமே ,
என் மூச்சு காற்றின் முகவரியே !
உன் இதழ் அசைவில் சற்றே இடறி
போனேன் !

கவி பாடும் காவியமே,
கண்கள் இமைக்கும் அதிசய ஓவியமே,
உன் ஆர்பரிக்கும் அழகுக்கு
அடிமையானேன் !

காவிய பேரழகே,
காத்திருக்கிறேன் உன் காதலுக்காக,
பச்சை கொடியசைத்து நம் பயணத்தை தொடங்குவாயா ?


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

வாழ்வில் உயர்வது பெரியதல்ல ?
உயர்த்தியரை மறவாமல் இருப்பதே,
பெரிது !
வெற்றிகளை குவிப்பது பெரியதல்ல ?
பிறர் மனம் நோகா வெற்றியே,
பெரிது !
தோல்விகளை சுமப்பது பெரியதல்ல ?
தோல்விகளில் கற்கும் பாடமே,
பெரிது !
நேர்மையை பேசுவது பெரியதல்ல ?
நேர்மையாக வாழ்வதே,
பெரிது !
அன்பை பெறுவது பெரியதல்ல ?
பெற்ற அன்புக்கு உண்மையாக இருப்பதே,
பெரிது !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

தழுதழுத்த குரலும்,
தள்ளாடும் நடையும் !
வலுவிழந்த கரமும்,
மனம்முறிந்த நெஞ்சும்!
பசித்திருக்கும் வயிறும்,
பகையில்லா பண்பும் !
அளவில்லா அன்பும்,
அடிப்பணியா மனமும் !
உண்மையில்லா உறவும்,
உறுதியற்ற உயிரும் !
உடையவர்கள் யாசகர்கள் ஆகின்,
என்போல் சிலருக்கோ அவர்கள்
நிகரில்லா நேசகர்கள் !


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 3 comments |

3 comments :

Post a Comment

நான் ?

அன்பென்னும் கடவுளை தினம்தோறும்,
தொழுபவன் நான் !!
ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் !!
ஆதிக்க அரசியலை அடியோடு,
வெறுப்பவன் நான் !!
மனிதருள் வேற்றுமை போற்றாமல்,
வாழ்பவன் நான் !!
வெற்றி தோல்விகளை சமமென,
கருதுபவன் நான் !!
உழைத்து வாழ்வதே உயர்வென,
நினைப்பவன் நான் !!
வாழ்வில் எதுவும் நிரந்திரமில்லை,
என்பதை உணர்ந்தவன் நான் !!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 5 comments |

5 comments :

Post a Comment

விழித்திருப்பது விடியலுக்காக அல்ல?
வெற்றிக்காக !
காத்திருப்பது கட்டளைக்காக அல்ல?
கடமைக்காக !
உழைப்பது வெற்றிக்காக அல்ல?
உண்மைக்காக !
போராடுவது ஆடம்பரத்துக்காக அல்ல?
அடிப்படைக்காக !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 4 comments |

4 comments :

Post a Comment

ஓடி ஒளிவது வாழ்க்கையில்லை,
தேடி தீர்ப்பது தான் வாழ்க்கை !
அஞ்சி அஞ்சி வாழ்வது
வாழ்க்கையில்லை,
அச்சத்தை துறப்பது தான் வாழ்க்கை !
சோகங்களை சுமப்பது
வாழ்க்கையில்லை,
சோகங்களை கடப்பது தான் வாழ்க்கை !
தோல்வியில் துவள்வது வாழ்க்கையில்லை,
முயற்சியோடு முயல்வது தான் வாழ்க்கை !
வெற்றியில் திளைப்பது வாழ்க்கையில்லை,
பிறர் வெற்றிக்கு வித்தாவது தான் வாழ்க்கை !
வாழ்வதோ ஒருமுறை ! வாழ்வோம் !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 6 comments |

6 comments :

Post a Comment

யார் மனிதன் ?
தனக்கெனவே வாழாமல் ,
பிறருக்காகவும் வாழ்பவனே, மனிதன் !
தன் பசி போக்கியதும் ,
பிறர் பசியை என்னுபவனே, மனிதன் !
தள்ளாடும் மனிதர்களை,
கரம் கொண்டு தாங்குபவனே, மனிதன் !
கடமையை மீறாமல்,
கண்ணியமாக வாழ்பவனே,மனிதன்!
பிறர் உழைப்பில் வாழாமல்,
தன் உழைப்பில் வாழ்பவனே , மனிதன் !
வஞ்சங்கள் சுமக்காமல்,
அன்பில் வாழ்பவனே ,மனிதன் !
பிறர் உணர்வுகளுக்கு,
மதிப்பளித்து வாழ்பவனே, மனிதன் !
வாழ்வின் ஏற்ற தாழ்வுகள்,
சமமென உணர்ந்தவனே,மனிதன் !
மனிதனாக வாழ முயற்சிப்போம்,
மனிதநேயம் காப்போம் !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

வலி என்ற பொழுதெல்லாம்,
ஆறுதல் நீயன்றோ !
அன்பால் என்னை ஆளும்,
ஆற்றலும் நீயன்றோ !
என் துயர் போக்க தோன்றிய,
தேவதை நீயன்றோ !
என் மெளனத்தின் அர்த்தங்கள்,
உணர்ந்தவளும் நீயன்றோ !
என் புன்னகையின் புதைந்திருக்கும்,
காரணமும் நீயன்றோ !
தோல்வியில் தோள் சாயும்,
நட்பும் நீயன்றோ !
தாயும் நீயன்றோ , சேயும் நீயன்றோ !
நினைவில் நிறைந்திருக்கும்,
நீங்கா உறவும் நீயன்றோ !
என் மரணத்தின் வாசல் வரை,
வருபவளும் நீயன்றோ !
நீயின்றி நானில்லை !
உன் நட்பின்றி வேறில்லை !!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

தொட வேண்டும் என துணிந்தால்,
தொடுவானமும் ஓர் தூரமில்லை !
கடக்க வேண்டும் என துணிந்தால்,
பெருங்கடலும் ஓர் ஆழமில்லை !
சுமக்க வேண்டும் என துணிந்தால்,
இமயமும் ஓர் பாரமில்லை !
எதிர்க்க வேண்டும் என துணிந்தால்,
புயலும் ஓர் தடையில்லை !
வாழ்க்கையை பிடித்தாற் போல் வாழ,
எதுவுமே ஓர் தடையில்லை !!!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment

உன்னை எண்ணி வாழ்ந்தெல்லாம் ,
நொடி பொழுதில் களைந்தது
ஏனோ ?
நீ உதிர்த்த வார்த்தைகள் நெஞ்சில் உரைந்து,
விடைப்பெற மறுப்பது
ஏனோ ?
நீயில்லா காலங்கள் தனிமையில்
கடந்திட மறுப்பது
ஏனோ ?
என் கண்ணீரின் பிறப்பிடமாய்,
உன் நினைவுகள் இருப்பது
ஏனோ ?
என் உயிரிலும் மேலான உன்னை,
மறப்பதிலும் இறத்தல்
எளிதோ ?!


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

என் விழியின் சோகங்களை
அறிந்தோரில்லை !
என் மௌனத்தின் அர்த்தங்களை
புரிந்தோரில்லை !
என் அன்பின் ஆழத்தை
அளந்தோரில்லை !
என் தனிமையின் வலிகளை
கடந்தோரில்லை !
என் கண்ணீரின் காரணங்களை
தெரிந்தோரில்லை !
என் இதயத்தின் வலிகளை
உணர்ந்தோரில்லை !



Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment


சூழ்ச்சிக்கள் செய்து ஒருவனை வீழ்த்துவதைவிட,
தோற்பதே மேல் !
பகையை மனதில் சுமந்து
வாழ்வதைவிட, மறப்பதே‌ மேல் !

ஆமாம் போடும் கோழையாக
வாழ்வதைவிட, எதிர்ப்பதே மேல் !
பிறர் உழைப்பை திருடி
வாழ்வதைவிட, சாதலே மேல் !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment

வலி எனக்கு புதிதல்ல ?
வலி தருபவர்கள் தான் புதிது !

தனிமை எனக்கு புதிதல்ல !
தனிமை தரும் அனுபவமே புதிது !

கண்ணீர் எனக்கு புதிதல்ல !
கண்ணீரின் காரணங்கள் தான் புதிது !

மனிதர்கள் எனக்கு புதிதல்ல !
அவர்களின் மாற்றங்கள் தான் புதிது !

வாழ்க்கையில் கஷ்டங்கள் புதிதல்ல !
அவை கற்றுத்தரும் பாடங்கள் புதிது !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment


நன்றி மறந்தவனையும் !
நன்றியோடு இருப்பவனையும் !!
ஒருநாளும் மறவாதே !!!


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment


நம்மை மதிப்பவர்களிடம்,
"அன்புக்கொள்"
நம்மை மதிக்காதவர்களிடம்,
"விலகிக்கொள்"
அன்புடன் பழகும் மனிதர்களிடம், உறவுக்கொள் !
தோல்வியில் தோள் கொடுப்பவர்களிடம்,
"நன்றிக்கொள்"
நன்றி மறவா மனிதர்களிடம்,
"நட்புக்கொள்"
நேர்மை தவிரா மனிதர்களிடம்,
"மரியாதைக்கொள்"
பிறர் வலி உணரும் மனிதர்களிடம்,
"பகிர்ந்துக்கொள்"
மனிதர்கள் அனைவரும் சமம்யென்பதை,
"மனதில்கொள்"



Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 5 comments |

5 comments :

Post a Comment


என் விழிகளின் ஏக்கங்கள் ?
தேவதையின் அம்சமென தோன்றும்
"உன் உருவம்"
என் செவிகளின் ஏக்கங்கள் ?
இசைப்போல் இனிக்கும்
"உன் குரல்"
என் கரங்களின் ஏக்கங்கள் ?
மணவறையில் கோர்த்திட தோன்றும்
"உன் மெல்லியகரங்கள்"
என் விரல்களின் ஏக்கங்கள் ?
மடிசாய்த்து தீண்டிட தோன்றும்
"உன் கருங்கூந்தல்"
என் இதயத்தின் ஏக்கங்கள் ?
மரண படுக்கையிலும் மறவாத
"உன் காதல்"



Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment



துணிவோடு நடப்பவனுக்கு,
பாதையை எண்ணிய பயமில்லை !
நட்புக்களோடு ‌வாழ்பவனுக்கு,
தனிமையை எண்ணிய கவலையில்லை !
கொடுத்தே பழகியவனுக்கு,
இழப்பை எண்ணிய வருத்தமில்லை !
உழைப்பை நம்புபவனுக்கு,
தோல்வியை எண்ணிய பயமில்லை !
முயற்சியோடு முயல்பவனுக்கு,
முடிவயை எண்ணிய கவலையில்லை !
வாழ்க்கையை உணர்ந்தவனுக்கு,
எதை எண்ணியும் கவலையில்லை !

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 2 comments |

2 comments :

Post a Comment

தடைகளுக்கு அஞ்சாமல் !
      தன்நலம் பாராமல் !
தலைகணம் இல்லாமல் !!
      தற்பெருமை கொள்ளாமல் !
தன்மானம் குன்றாமல் !
      தர்மம் தோற்காமல் !!
தவறுகள் புரியாமல் !
      தரம் தாழாமல் !!
வாழ்பவனே உயர்ந்த மனிதன் :)
Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 3 comments |

3 comments :

Post a Comment


முடிந்தால் நால்வரை
என்‌ தோள்களில்‌ சுமப்பேனேயின்றி ,
"ஒருநாளும்" பிறர் தோள்களுக்கு
சுமையாகேன் !!!


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment


கடினமாக நீ உழைத்தால்,
கண்ணியத்தோடு வாழலாம் !
துணிவுடன் நீ நடந்தால்,
துயரங்கள் போக்கலாம் !!

பணிவுடன் நீ வாழ்ந்தால்,
பண்பாலன் ஆகலாம் !
கோவங்கள் நீ தவிர்த்தால்,
குணாலன் ஆகலாம் !!

விடாமல் நீ முயன்றால்,
வெற்றியாலன் ஆகலாம் !
உண்மையாக நீ உழைத்தால்,
தலைவன் ஆகலாம் !!

Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 7 comments |

7 comments :

Post a Comment


வெற்றியை மட்டுமே நோக்கி பயணிப்பவனுக்கு?
தோல்வியின் மேல் எப்பொழுதும்
பயம் இருக்கும் !
வெற்றியும் ! தோல்விவும் !! சமமென
உணர்ந்தவன் என்றுமே ‌பயமறியான் !!!


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment


விடியலுக்கு முன்னரே!விழித்தெழு தமிழா!!
உன் வியர்வை துளிகள்,
வெற்றிக்கு விதையாகட்டும் !!!

தடைகள் பொடிபட ! தன்மானம் காத்திட!
வீர்கொண்டு வா தமிழா !!
உன் வீரம் இவ்வுலகிற்கு சான்றாகட்டும்!!!

இரத்தம் கொதித்திட ! யுத்தும் புரிந்திட!
படைக்கொண்டு வா தமிழா !!
எழுச்சியில் எதிரிகள் பொடியாகட்டும் !!!

அநீதியை அழித்திட ! தர்மம் நிலைத்திட!
சீற்றிட்டு வா தமிழா !!
வேள்வியில் அதர்மங்கள் அழியட்டும் !!!

துயரங்கள் விலகிட‌‌ ! உயரங்கள் தீண்டிட!
உறுதிக்கொண்டு வா‌ தமிழா !!
உழைப்பில் இவ்வுலகை நீ ஆண்டிட :)


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment


பொய்மையை புறம்தள்ளி,
மெய்யின் பின்னோடும் மனமிது !
காரணங்களை தேடாமல்,
காரியங்களை நிறைவேற்றும் மனமிது !

அறிவை புறம்தள்ளி,
அன்பின் பின்னோடும் மனமிது !
குறைகளை தேடாமல்,
நிறைகள் நிறைந்திருக்கும் மனமிது !

அகந்தையை புறம்தள்ளி,
அன்போடு பழகும் மனமிது !
வலிகள் பல சுமந்தாலும்,
புன்னகையை மறவா மனமிது !

தோல்விகளை புறம்தள்ளி,
வெற்றியின் பின்னோடும் மனமிது !
தோல்விகள் தொடர்ந்தாலும்,
முயற்சியை கைவிடா‌ மனமிது !




Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment


வறுமையில் வாழ்வோரை வாழ்விக்க,
நாம் முயல்வோம் !
பிறர் வலி உணர்ந்து எப்பொழுதும்,
நாம் வாழ்வோம் !
தனிமையில் தவிப்போரை தாங்கிடவே,
நாம் சேர்வோம் !
துயரெதுவும் தொடராமல் வாழ்ந்திட,
நாம் வழிசெய்வோம் ‌!
துரோகத்தில் வீழ்ந்தோரை விழித்தெழவே,
நாம் முயல்வோம் !
அன்புக்கு ‌ஏங்குவோருக்கு அடைகளமாய்,
நாம் வாழ்வோம் !
அறம் செய்தே நம் வாழ்வை எப்பொழுதும்,
நாம் வெல்வோம் !




Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :

Post a Comment