கிறுக்கல்-105 | 22-09-2019

பணம் மறந்த பாதசாரியாய்,
சில நாள் !!
சுற்றி திரியும் பறவையாய்,
சில நாள் !!
பச்சிளம் குழந்தையின் புன்னகையாய்,
சில நாள் !!
மண்ணுக்கு உரம் சேர்க்கும் புழுவாக,
சில நாள் !!
இளைப்பாற நிழல் தரும் மரமாக,
சில நாள் !!!
கள்ளம் கபடமற்ற மனிதனாய்,
சில நாள் !!
வாழ்ந்திடவோ ஆசை !?
வாழ்ந்திடவோ ஆசை !?


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment