கிறுக்கல்-104 | 14-07-2019

வலிகள் யாவும் வரிகளாக,
மாறிட கண்டேன் 😔
விழிகள் யாவும் கண்ணீரில்,
மூழ்கிட கண்டேன் 😔
காதல் யாவும் காற்றில்,
கரைந்திட கண்டேன் 😔
புன்னகை யாவும் புதையலாய்,
தோன்றிட கண்டேன் 😔
சிந்தனை‌கள் யாவும் ஒன்றாக,
சிதறிட கண்டேன் 😔
ஏமாற்றங்கள் யாவும் மனதை கல்லாய்,
மாற்றிட கண்டேன் 😔
மனிதர்கள் யாவரும் நிமிடங்களில்,
மாறிட கண்டேன் 😔
எத்தனை மாற்றங்கள் என்னுள் !!!
வாழ்க்கை இதுதானோ ?
வாழ்க்கை இதுதானோ ?😔😣


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 1 comment |

1 comment :