கிறுக்கல்-82 | 23-04-2019

இதய துடிப்பை இருக்கி பிடித்தவளே !
இமைகள் அசையா அதிசயமே !
உன் நிழல் பார்த்தே நான்
காதலுற்றேன் !

உயிர் ஊட்டிய ஒவியமே ,
என் மூச்சு காற்றின் முகவரியே !
உன் இதழ் அசைவில் சற்றே இடறி
போனேன் !

கவி பாடும் காவியமே,
கண்கள் இமைக்கும் அதிசய ஓவியமே,
உன் ஆர்பரிக்கும் அழகுக்கு
அடிமையானேன் !

காவிய பேரழகே,
காத்திருக்கிறேன் உன் காதலுக்காக,
பச்சை கொடியசைத்து நம் பயணத்தை தொடங்குவாயா ?



மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment