கிறுக்கல்-73 | 03-04-2019

உன்னை எண்ணி வாழ்ந்தெல்லாம் ,
நொடி பொழுதில் களைந்தது
ஏனோ ?
நீ உதிர்த்த வார்த்தைகள் நெஞ்சில் உரைந்து,
விடைப்பெற மறுப்பது
ஏனோ ?
நீயில்லா காலங்கள் தனிமையில்
கடந்திட மறுப்பது
ஏனோ ?
என் கண்ணீரின் பிறப்பிடமாய்,
உன் நினைவுகள் இருப்பது
ஏனோ ?
என் உயிரிலும் மேலான உன்னை,
மறப்பதிலும் இறத்தல்
எளிதோ ?!



மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment