கிறுக்கல்-79 | 19-04-2019

நான் ?

அன்பென்னும் கடவுளை தினம்தோறும்,
தொழுபவன் நான் !!
ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் !!
ஆதிக்க அரசியலை அடியோடு,
வெறுப்பவன் நான் !!
மனிதருள் வேற்றுமை போற்றாமல்,
வாழ்பவன் நான் !!
வெற்றி தோல்விகளை சமமென,
கருதுபவன் நான் !!
உழைத்து வாழ்வதே உயர்வென,
நினைப்பவன் நான் !!
வாழ்வில் எதுவும் நிரந்திரமில்லை,
என்பதை உணர்ந்தவன் நான் !!


மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 5 comments |

5 comments :