கிறுக்கல்-92 | 16-05-2019

உழைத்துக்கொண்டே இரு,
ஒருநாள் ! நம் உழைப்பு அங்கீகாரம்
பெற்றே தீரும் !!
நம்பிக்கை விதைத்துக்கொண்டே இரு,
ஒருநாள் ! நாம் விதைத்தவையாவும் விளைந்தே தீரும் !!
முயன்றுக்கொண்டே இரு,
ஒருநாள் ! முயற்சி நம்மை முன்
நகர்த்தியே தீரும் !!
அறிவை பகிர்ந்துக்கொண்டே இரு,
ஒருநாள் ! பகிர்ந்தவை பண்மடங்கு பெறுகியே தீரும் !!
மனிதத்தை போற்றிக்கொண்டே இரு,
ஒருநாள் ! மனிதர்கள் அனைவரும்
மாறியே தீருவார்கள் !!!



மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| 4 comments |

4 comments :