ஓடி ஒளிவது வாழ்க்கையில்லை,
தேடி தீர்ப்பது தான் வாழ்க்கை !
அஞ்சி அஞ்சி வாழ்வது
வாழ்க்கையில்லை,
அச்சத்தை துறப்பது தான் வாழ்க்கை !
சோகங்களை சுமப்பது
வாழ்க்கையில்லை,
சோகங்களை கடப்பது தான் வாழ்க்கை !
தோல்வியில் துவள்வது வாழ்க்கையில்லை,
முயற்சியோடு முயல்வது தான் வாழ்க்கை !
வெற்றியில் திளைப்பது வாழ்க்கையில்லை,
பிறர் வெற்றிக்கு வித்தாவது தான் வாழ்க்கை !
வாழ்வதோ ஒருமுறை ! வாழ்வோம் !!!
தேடி தீர்ப்பது தான் வாழ்க்கை !
அஞ்சி அஞ்சி வாழ்வது
வாழ்க்கையில்லை,
அச்சத்தை துறப்பது தான் வாழ்க்கை !
சோகங்களை சுமப்பது
வாழ்க்கையில்லை,
சோகங்களை கடப்பது தான் வாழ்க்கை !
தோல்வியில் துவள்வது வாழ்க்கையில்லை,
முயற்சியோடு முயல்வது தான் வாழ்க்கை !
வெற்றியில் திளைப்பது வாழ்க்கையில்லை,
பிறர் வெற்றிக்கு வித்தாவது தான் வாழ்க்கை !
வாழ்வதோ ஒருமுறை ! வாழ்வோம் !!!
6 comments Read More
யார் மனிதன் ?
தனக்கெனவே வாழாமல் ,
பிறருக்காகவும் வாழ்பவனே, மனிதன் !
தன் பசி போக்கியதும் ,
பிறர் பசியை என்னுபவனே, மனிதன் !
தள்ளாடும் மனிதர்களை,
கரம் கொண்டு தாங்குபவனே, மனிதன் !
கடமையை மீறாமல்,
கண்ணியமாக வாழ்பவனே,மனிதன்!
பிறர் உழைப்பில் வாழாமல்,
தன் உழைப்பில் வாழ்பவனே , மனிதன் !
வஞ்சங்கள் சுமக்காமல்,
அன்பில் வாழ்பவனே ,மனிதன் !
பிறர் உணர்வுகளுக்கு,
மதிப்பளித்து வாழ்பவனே, மனிதன் !
வாழ்வின் ஏற்ற தாழ்வுகள்,
சமமென உணர்ந்தவனே,மனிதன் !
மனிதனாக வாழ முயற்சிப்போம்,
மனிதநேயம் காப்போம் !
தனக்கெனவே வாழாமல் ,
பிறருக்காகவும் வாழ்பவனே, மனிதன் !
தன் பசி போக்கியதும் ,
பிறர் பசியை என்னுபவனே, மனிதன் !
தள்ளாடும் மனிதர்களை,
கரம் கொண்டு தாங்குபவனே, மனிதன் !
கடமையை மீறாமல்,
கண்ணியமாக வாழ்பவனே,மனிதன்!
பிறர் உழைப்பில் வாழாமல்,
தன் உழைப்பில் வாழ்பவனே , மனிதன் !
வஞ்சங்கள் சுமக்காமல்,
அன்பில் வாழ்பவனே ,மனிதன் !
பிறர் உணர்வுகளுக்கு,
மதிப்பளித்து வாழ்பவனே, மனிதன் !
வாழ்வின் ஏற்ற தாழ்வுகள்,
சமமென உணர்ந்தவனே,மனிதன் !
மனிதனாக வாழ முயற்சிப்போம்,
மனிதநேயம் காப்போம் !
1 comment Read More
வலி என்ற பொழுதெல்லாம்,
ஆறுதல் நீயன்றோ !
அன்பால் என்னை ஆளும்,
ஆற்றலும் நீயன்றோ !
என் துயர் போக்க தோன்றிய,
தேவதை நீயன்றோ !
என் மெளனத்தின் அர்த்தங்கள்,
உணர்ந்தவளும் நீயன்றோ !
என் புன்னகையின் புதைந்திருக்கும்,
காரணமும் நீயன்றோ !
தோல்வியில் தோள் சாயும்,
நட்பும் நீயன்றோ !
தாயும் நீயன்றோ , சேயும் நீயன்றோ !
நினைவில் நிறைந்திருக்கும்,
நீங்கா உறவும் நீயன்றோ !
என் மரணத்தின் வாசல் வரை,
வருபவளும் நீயன்றோ !
நீயின்றி நானில்லை !
உன் நட்பின்றி வேறில்லை !!
ஆறுதல் நீயன்றோ !
அன்பால் என்னை ஆளும்,
ஆற்றலும் நீயன்றோ !
என் துயர் போக்க தோன்றிய,
தேவதை நீயன்றோ !
என் மெளனத்தின் அர்த்தங்கள்,
உணர்ந்தவளும் நீயன்றோ !
என் புன்னகையின் புதைந்திருக்கும்,
காரணமும் நீயன்றோ !
தோல்வியில் தோள் சாயும்,
நட்பும் நீயன்றோ !
தாயும் நீயன்றோ , சேயும் நீயன்றோ !
நினைவில் நிறைந்திருக்கும்,
நீங்கா உறவும் நீயன்றோ !
என் மரணத்தின் வாசல் வரை,
வருபவளும் நீயன்றோ !
நீயின்றி நானில்லை !
உன் நட்பின்றி வேறில்லை !!
1 comment Read More