விடுமுறை நாட்களிலும்,
விடாமல் தான் உழைப்பார்.
பம்பரம் போல் சுழன்று,
கடமைகளை தான் முடிப்பார்.
கஷ்டங்கள் வந்தாலும்,
தன் தோள்மீது தான் சுமப்பார்.
துயரங்கள் தொடர்ந்தாலும்,
தளராமல் தான் இருப்பார்.
புத்தாடைகள் தான் அளித்து,
மகிழ்ச்சியில் மூழ்கடிப்பார்.
நாம் செய்யும் குறும்புகளை,
தொலைவிலிருந்தே தான் இரசிப்பார்.
பச்சிளம் குழந்தைப்போல் ,
எப்பொழுதும் தான் சிரிப்பார்.
தவறு ஏதும் செய்துவிட்டால்,
தவறாமல் தான் கண்டிப்பார்.
சிறுதுளி கண்ணீரையும்,
வராமல் தான் தடுப்பார்.
உயிர் போகும் நிலையிலையும்,
நம் குரல் கேட்கத்தான் துடிப்பார்.
2 comments Read More
உன் நினைவில் நான் மிதந்தேன்.
மிதக்கும் காற்றில்,
உன் சுவாசத்தை நான் உணர்ந்தேன்.
விடியும் முன்னரே ,
உன்னை பார்க்க நான் தவித்தேன்.
உன் முகம் பார்த்தால்,
பசி மறந்து தான் கிடப்பேன்.
நீ பேசும் வார்த்தைகள்,
நெஞ்சோடு தான் புதைத்தேன்.
உன் கைவிரல் கோர்த்து,
நடைபோட தான் துடித்தேன்.
உன் மடியில் தலைசாய்த்து,
முடிகோத என்னை மறப்பேன்.
நீ என்னை அனைத்திடவே,
இதயத்தின் வலி இழப்பேன்.
உன்னுடன் வாழ்ந்திடவே,
இப்பிறவி நான் எடுத்தேன் !!!
Leave a Comment Read More
கருவாக நீயிருந்த காலத்தில்,
கற்பனையில் நான் மிதந்து,
உன் உருவம் தனை வரைந்து,
உன் நினைவோடு தான் வாழ்ந்தேன்.
கற்பனையில் நான் மிதந்து,
உன் உருவம் தனை வரைந்து,
உன் நினைவோடு தான் வாழ்ந்தேன்.
முதல் அழுகை தனை கேட்டு,
துடித்தெழுந்து உனை பார்க்க,
விரைந்தோடி தான் வந்தேன்.
துடித்தெழுந்து உனை பார்க்க,
விரைந்தோடி தான் வந்தேன்.
மெல்லிய விரல் தொட்டு,
மெது மெதுவாய் உன்னை தூக்கி,
நெஞ்சோடு தான் அனைத்து,
நெடு நேரம் உன்னை இரசித்தேன்.
மெது மெதுவாய் உன்னை தூக்கி,
நெஞ்சோடு தான் அனைத்து,
நெடு நேரம் உன்னை இரசித்தேன்.
உன் மூச்சி என்னை மோத,
உன் சிரிப்பில் தான் மூழ்கி,
விளங்கா முடியா காதலில்,
மெய் மறந்து தான் நின்றேன்.
உன் சிரிப்பில் தான் மூழ்கி,
விளங்கா முடியா காதலில்,
மெய் மறந்து தான் நின்றேன்.
உனது அருகில் நான் அமர்ந்து,
நீ உறங்க நான் இரசித்தேன்.
தூக்கத்தில் நீ அழுதால்,
துடித்திடவே நான் எழுவேன்.
நீ உறங்க நான் இரசித்தேன்.
தூக்கத்தில் நீ அழுதால்,
துடித்திடவே நான் எழுவேன்.
உன் மழலை பேச்சினிலே,
நான் மூழ்கி மீளாமல் ,
என்னை மறந்து உன்னை இரசித்தேன்..
நான் மூழ்கி மீளாமல் ,
என்னை மறந்து உன்னை இரசித்தேன்..
நீ என்னை அனைத்திடவே ,
நிகழ்காலம் தனை மறந்து,
நிலவில் மிதப்பது போல்,
நான் உணர்ந்தேன்.
நிகழ்காலம் தனை மறந்து,
நிலவில் மிதப்பது போல்,
நான் உணர்ந்தேன்.
உனக்காக நான் வாழ்ந்து,
என் ஆயுள் முழுவதையும்,
உனக்கெனவே நான் தந்து,
நீ வாழ நான் மகிழ்வேன் :)
என் ஆயுள் முழுவதையும்,
உனக்கெனவே நான் தந்து,
நீ வாழ நான் மகிழ்வேன் :)
5 comments Read More




