என் விழியின் சோகங்களை
அறிந்தோரில்லை !
என் மௌனத்தின் அர்த்தங்களை
புரிந்தோரில்லை !
என் அன்பின் ஆழத்தை
அளந்தோரில்லை !
என் தனிமையின் வலிகளை
கடந்தோரில்லை !
என் கண்ணீரின் காரணங்களை
தெரிந்தோரில்லை !
என் இதயத்தின் வலிகளை
உணர்ந்தோரில்லை !




1 comment Read More

சூழ்ச்சிக்கள் செய்து ஒருவனை வீழ்த்துவதைவிட,
தோற்பதே மேல் !
பகையை மனதில் சுமந்து
வாழ்வதைவிட, மறப்பதே‌ மேல் !

ஆமாம் போடும் கோழையாக
வாழ்வதைவிட, எதிர்ப்பதே மேல் !
பிறர் உழைப்பை திருடி
வாழ்வதைவிட, சாதலே மேல் !


1 comment Read More
வலி எனக்கு புதிதல்ல ?
வலி தருபவர்கள் தான் புதிது !

தனிமை எனக்கு புதிதல்ல !
தனிமை தரும் அனுபவமே புதிது !

கண்ணீர் எனக்கு புதிதல்ல !
கண்ணீரின் காரணங்கள் தான் புதிது !

மனிதர்கள் எனக்கு புதிதல்ல !
அவர்களின் மாற்றங்கள் தான் புதிது !

வாழ்க்கையில் கஷ்டங்கள் புதிதல்ல !
அவை கற்றுத்தரும் பாடங்கள் புதிது !


2 comments Read More

நன்றி மறந்தவனையும் !
நன்றியோடு இருப்பவனையும் !!
ஒருநாளும் மறவாதே !!!



2 comments Read More

நம்மை மதிப்பவர்களிடம்,
"அன்புக்கொள்"
நம்மை மதிக்காதவர்களிடம்,
"விலகிக்கொள்"
அன்புடன் பழகும் மனிதர்களிடம், உறவுக்கொள் !
தோல்வியில் தோள் கொடுப்பவர்களிடம்,
"நன்றிக்கொள்"
நன்றி மறவா மனிதர்களிடம்,
"நட்புக்கொள்"
நேர்மை தவிரா மனிதர்களிடம்,
"மரியாதைக்கொள்"
பிறர் வலி உணரும் மனிதர்களிடம்,
"பகிர்ந்துக்கொள்"
மனிதர்கள் அனைவரும் சமம்யென்பதை,
"மனதில்கொள்"




5 comments Read More