என் விழிகளின் ஏக்கங்கள் ?
தேவதையின் அம்சமென தோன்றும்
"உன் உருவம்"
என் செவிகளின் ஏக்கங்கள் ?
இசைப்போல் இனிக்கும்
"உன் குரல்"
என் கரங்களின் ஏக்கங்கள் ?
மணவறையில் கோர்த்திட தோன்றும்
"உன் மெல்லியகரங்கள்"
என் விரல்களின் ஏக்கங்கள் ?
மடிசாய்த்து தீண்டிட தோன்றும்
"உன் கருங்கூந்தல்"
என் இதயத்தின் ஏக்கங்கள் ?
மரண படுக்கையிலும் மறவாத
"உன் காதல்"
2 comments Read More
துணிவோடு நடப்பவனுக்கு,
பாதையை எண்ணிய பயமில்லை !
நட்புக்களோடு வாழ்பவனுக்கு,
தனிமையை எண்ணிய கவலையில்லை !
கொடுத்தே பழகியவனுக்கு,
இழப்பை எண்ணிய வருத்தமில்லை !
உழைப்பை நம்புபவனுக்கு,
தோல்வியை எண்ணிய பயமில்லை !
முயற்சியோடு முயல்பவனுக்கு,
முடிவயை எண்ணிய கவலையில்லை !
வாழ்க்கையை உணர்ந்தவனுக்கு,
எதை எண்ணியும் கவலையில்லை !
பாதையை எண்ணிய பயமில்லை !
நட்புக்களோடு வாழ்பவனுக்கு,
தனிமையை எண்ணிய கவலையில்லை !
கொடுத்தே பழகியவனுக்கு,
இழப்பை எண்ணிய வருத்தமில்லை !
உழைப்பை நம்புபவனுக்கு,
தோல்வியை எண்ணிய பயமில்லை !
முயற்சியோடு முயல்பவனுக்கு,
முடிவயை எண்ணிய கவலையில்லை !
வாழ்க்கையை உணர்ந்தவனுக்கு,
எதை எண்ணியும் கவலையில்லை !
2 comments Read More





