மண்ணில் புதைந்திருக்கும் விதைப் போல்,

என்னுள் புதைந்திருக்கும் காதல்,

சிறு புன்னகை யாய் நீ தூர, முளைக்கும்!


அன்பை உரமாக்கி, அளவோடு தான்னிட்டு,

நித்தம் கவனமாய் நான் வளர்க்க,

மரமாகத் தான் மாறும் அக்காதல் !


அன்பே மலராய் பூத்துக்குளுங்கிட,

வண்ணத்துப்பூச்சாகி அவ்வன்பைப் பருகிட,

ஆயுள் கூடக் கண்டேன் !


இயற்க்கையளித்த இப்பரிசை,

கவனமாய் பாதுகாத்து,

எப்போழுதும் செழிக்கும் வழிச் செய்வேன்!




Leave a Comment Read More

நிலவொளி நீயென்றால்,

கருவிழியாய் நான்மாறி,

என்னுள் உன்னை சிறைப்பிடிப்பேன் !


பனித்துளி நீயென்றால்,

சூரியனாய் நான்மாறி,

உன்னை நான் அடைவேன் !


மழைநீர்  நீயென்றால்,

கடலாக நான்மாறி,

என்னுள் உன்னை சேர்ப்பேன் !


காற்றாய் நீயானால்,

கலைஞனாய் நான்மாறி,

உன்னை நான் இசைப்பேன் !


இரவாக நீயானால்,

கனவாக நான்மாறி,

என்னுள் நான் நிறைவேன் !


தமிழாய் நீயானால்,

கவியாய் நான்மாறி,

காவிய கவி படைப்பேன்



Leave a Comment Read More
மறுநொடி மர்மங்கள்அவிழா ,
வியப்பூட்டும் வாழ்விது !
கதிரவனே காரிருளில் மூழ்க,
நாம் என்ன விதிவிலக்கா ?!
நம் துன்பங்கள் யாவும்
கணநொடியில் கரைந்து போகலாம்!
நம்பிக்கையோடு நகர்வோம் !


1 comment Read More
இறப்பை தவிர,  பிற யாவும் !
முயற்சித்தால் திரும்ப பெற கூடியதே !!


Leave a Comment Read More
எழுதப்பட்டவையே யாவும் !எதையிழந்தாலும் கவலையின்றி,
நடப்பவை நடக்கட்டும் என்பதே வாழ்க்கை !!


Leave a Comment Read More