மண்ணில் புதைந்திருக்கும் விதைப் போல்,
என்னுள் புதைந்திருக்கும் காதல்,
சிறு புன்னகை யாய் நீ தூர, முளைக்கும்!
அன்பை உரமாக்கி, அளவோடு தான்னிட்டு,
நித்தம் கவனமாய் நான் வளர்க்க,
மரமாகத் தான் மாறும் அக்காதல் !
அன்பே மலராய் பூத்துக்குளுங்கிட,
வண்ணத்துப்பூச்சாகி அவ்வன்பைப் பருகிட,
ஆயுள் கூடக் கண்டேன் !
இயற்க்கையளித்த இப்பரிசை,
கவனமாய் பாதுகாத்து,
எப்போழுதும் செழிக்கும் வழிச் செய்வேன்!
Leave a Comment Read More
நிலவொளி நீயென்றால்,
கருவிழியாய் நான்மாறி,
என்னுள் உன்னை சிறைப்பிடிப்பேன் !
பனித்துளி நீயென்றால்,
சூரியனாய் நான்மாறி,
உன்னை நான் அடைவேன் !
மழைநீர் நீயென்றால்,
கடலாக நான்மாறி,
என்னுள் உன்னை சேர்ப்பேன் !
காற்றாய் நீயானால்,
கலைஞனாய் நான்மாறி,
உன்னை நான் இசைப்பேன் !
இரவாக நீயானால்,
கனவாக நான்மாறி,
என்னுள் நான் நிறைவேன் !
தமிழாய் நீயானால்,
கவியாய் நான்மாறி,
காவிய கவி படைப்பேன்
Leave a Comment Read More
எழுதப்பட்டவையே யாவும் !எதையிழந்தாலும் கவலையின்றி,
நடப்பவை நடக்கட்டும் என்பதே வாழ்க்கை !!
நடப்பவை நடக்கட்டும் என்பதே வாழ்க்கை !!
Leave a Comment Read More