மண்ணில் புதைந்திருக்கும் விதைப் போல்,

என்னுள் புதைந்திருக்கும் காதல்,

சிறு புன்னகை யாய் நீ தூர, முளைக்கும்!


அன்பை உரமாக்கி, அளவோடு தான்னிட்டு,

நித்தம் கவனமாய் நான் வளர்க்க,

மரமாகத் தான் மாறும் அக்காதல் !


அன்பே மலராய் பூத்துக்குளுங்கிட,

வண்ணத்துப்பூச்சாகி அவ்வன்பைப் பருகிட,

ஆயுள் கூடக் கண்டேன் !


இயற்க்கையளித்த இப்பரிசை,

கவனமாய் பாதுகாத்து,

எப்போழுதும் செழிக்கும் வழிச் செய்வேன்!



Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment

நிலவொளி நீயென்றால்,

கருவிழியாய் நான்மாறி,

என்னுள் உன்னை சிறைப்பிடிப்பேன் !


பனித்துளி நீயென்றால்,

சூரியனாய் நான்மாறி,

உன்னை நான் அடைவேன் !


மழைநீர்  நீயென்றால்,

கடலாக நான்மாறி,

என்னுள் உன்னை சேர்ப்பேன் !


காற்றாய் நீயானால்,

கலைஞனாய் நான்மாறி,

உன்னை நான் இசைப்பேன் !


இரவாக நீயானால்,

கனவாக நான்மாறி,

என்னுள் நான் நிறைவேன் !


தமிழாய் நீயானால்,

கவியாய் நான்மாறி,

காவிய கவி படைப்பேன்


Read more ...
மோகன் இலட்சுமணன்
முயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் !!!


| Leave a Comment |

No comments :

Post a Comment